பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்............

 பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்............

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ளதாக (16) திகதி இரவு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளனர்.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு எதிர்வரும் 23.10.2023 திகதி புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரண மாணவர்கள் மூவர் இணைந்து இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரினை குறுகிய நேரத்திற்குள் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து மீண்டுமொருமுறை சாதனையினை நிலைநாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்தடையவுள்ள சிரேஷ்ட சாரணர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த சாதனையை நிலைநாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் பாடசாலை அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப், மாவட்ட சாரணர் ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன், சாரண ஆசிரியர் இன்னாசி கிறிஸ்டி மற்றும் சாரண மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோரும் கலந்துகொண்டிருந்ததுடன், அதிபர் மற்றும் சாரண ஆணையாளரினால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கொடிச்சீலைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Comments