காத்தான்குடியில் வாழ்வாதார அபிவிருத்திக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.....

காத்தான்குடியில் வாழ்வாதார அபிவிருத்திக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.....

சமுர்த்தி திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு காத்தான்குடி சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வாழ்வாதார அபிவிருத்திக்கான கடன் உதவிகள்இன்று (17) வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர் பயனாளிகளுக்கான கடன் உதவிகளை வழங்கி வைத்தார். இதன் போது காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் ஊடாக ஐந்து பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாவும், அருணளுக்கடன் ஒரு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கு 70,000 ரூபாவும் வழங்கப்பட்டது.

புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் ஊடாக 5 பயனாளிகளுக்கு 8 லட்சம் ரூபாவும், அருணளுக் கடனாக ஒரு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கு 75,000 ரூபாவும் வழங்கப்பட்டதுடன், சிறுவர் சேமிப்புக்கான உண்டியல்களும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் சுல்மி, புதிய காத்தான்குடி வங்கி முகாமையாளர் முகாமையாளர் முஸம்மில், சமுர்த்தி பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Comments