உயரம் பாய்தலில் தங்கம் வென்று அசத்திய பகிர்ஜனுக்கு அமோக வரவேற்பு....
பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில், மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலய மாணவன் கு.பகிர்ஜன் உயரம் பாய்தலில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு 1.69 மீற்றர் உயரம் பாய்ந்னுக்கு தங்கப் பதக்கத்தை பகிர்ஜன் வென்றுள்ளார்.
தேசியமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 2016க்கு பின்னர் களுதாவளை தேசிய பாடசாலை தங்கப்பதக்கத்தை வென்றெடுத்துள்ளது.
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற பகிர்ஜன் உட்பட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பாடசாலை அதிபர் க.சத்தியமோகன் தலைமையில், மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
Comments
Post a Comment