சிவாநந்தா ஆசிரியர்களுக்கான அறை திறந்து வைப்பு.....

 சிவாநந்தா ஆசிரியர்களுக்கான அறை திறந்து வைப்பு.....

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  சிவாநந்தா பாடசாலையின் ஆசிரியர்களுக்கான ஓய்வு நேர அறை சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர்களது  நிதி பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் (06) திறந்து வைக்கப்பட்டது.

   சிவானந்தா வித்தியாலய அதிபர் த.தயாபரன், பிரதி அதிபர் க.சுவர்ணேஸ்வரன் மற்றும் ஆசிரியர் தி. தயாபரன் ஆகியோரின்  வழிகாட்டலுடன்  ஆசிரியர்களுக்கான அறையினை ( Teachers Staff Room) புனருத்தாரணம் செய்து மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

 இவ் நிகழ்வில் அதிபர் த.தயாபரன், பிரதி அதிபர்கள், உதவி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க தலைவர்  வ.வாசுதேவன், 96 O/L. 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் குழுவின் தலைவர்  சிவப்ரியா வில்வரட்னெம், விவேகானந்தா பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர் மற்றும் 2030 திட்ட அமைப்பின் சார்பில் வைத்தியர் பிரமீளா சசிகுமார், 94ம் ஆண்டு உயர்தர  வகுப்பு  Bio மாணவர்கள் சார்பாக திரு.இளங்கோ ஆகியோருடன் பழைய மாணவர் சங்கம் சார்பில் விளையாட்டு இணைப்பு செயலாளர் திரு.டிஷாந்த் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திரு.ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கான நிதியினை 2030 திட்ட அமைப்பினர் 96 O/L, 99 A/L வகுப்பு பழைய மாணவர்கள் 94ம் ஆண்டு Bio உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் என பலரும் உதவி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Comments