மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு......

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு......

சர்வதேச சிறுவர் தினம், முதியோர்  வார நிகழ்வுகளை முன்னிட்ட (05) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவும் இணைந்து சிறுவர் முதியோர் நிகழ்வுகளை (05) அன்று டேபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடாத்தி இருந்தது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட உதவி செயலாளர் A.நவேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  S.புவனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது சிசுபல வேலைத்திட்டத்தில் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட செயலக சமுர்த்தி சமூக பிரிவினரால்  வழங்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.













Comments