மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தின் வறுமை ஒழிப்பு தின நிகழ்வு கோரளைப்பற்று மத்தியில்....

 மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி  அலுவலகத்தின் வறுமை ஒழிப்பு தின நிகழ்வு கோரளைப்பற்று மத்தியில்....

2023ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தின் வறுமை ஒழிப்பு தின நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் பிரதேச செயலாளர் S.H.முசம்மில் அவர்களின் தலைமையில் (17)  ஆகிய இன்று இடம்பெற்றது.

 சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி திட்டத்தின் கீழ்  நிர்மானிக்கப்பட்ட  ஜெயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழ்  இரண்டு வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் மற்றும் மாவட்ட பதில் கணக்காளர் S.M.பசீர் ஆகியோரால்   பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு பயிர் கன்றுகள் வழங்கப்பட்டதுடன், உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் வறிய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சமுர்த்தி வங்கியூடாக கடன்கள் வழங்கப்பட்டதுன், முன்னைய காலங்களில் சமுர்த்தி வங்கியூடாக கடன்களை பெற்று  சிறப்பாக தொழில் முயற்சியை மேற்கொண்டு வரும்  முயற்சியாளர்களும் கௌரவிப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ், மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர் T.புவிதரன், கோறளைப்பற்று மத்தி தலைமையக சமுர்த்தி முகாமையாளர் SAM.பசீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் MLA.மஜீத், கல்குடா சக்காத் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் MTM.அஷ்ரப்,   சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L. ஐயூப்கான், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் A.B.காதர் முகம்மட்,  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்   ST.பைறூஸ், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களான CMS.இஸ்மாயில், NMH.முகம்மட்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.









Comments