ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் ஜயவிமன வீடு கையளிப்பு.......

 ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் ஜயவிமன வீடு கையளிப்பு.......

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில்   ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடுபூராவும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் படி இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவுறுத்தலுக்கு அமைவாக   புதிய வீடுகள் ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் திறந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது ஜயவிமன வீடமைப்பில் தெரிவு செய்யப்பட்ட மாவடிவேம்பு-02 பிரிவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சின்னராசா என்பவரின் வீடு இன்று (24) பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளியடம் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் S.சுதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம், கருத்திட்ட முகாமையாளர் K.கலாதேவன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் J.சுதாசினி, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் S.தவநீதன் மற்றும் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் S.சோபனாநந்தினிஎன பலரும் கலந்து கொண்டனர்.


முன்னர் வாழ்ந்த வீடு......


தற்போது தற்போது வாழப்போகும் புதிய வீடு.........



Comments