கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் கடமை பொறுப்பேற்பு.......

 கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் கடமை பொறுப்பேற்பு.......

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக இருந்த சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று (02) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் அவர்கள் ஓய்வு நிலைக்கு சென்றதை தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் இணைந்து கொண்ட இவர், 2017ல் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டவர்.  இவர் இள வயதில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபராகவும். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Comments