மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர், முதியோர் தின விழா ......

 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர், முதியோர் தின விழா ......

 களுவாஞ்சிகுடி நந்தவனம் சமூக நலன்புரி அமைப்புடன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர், முதியோர் தின விழாவானது நந்தவனம் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் சா.கருணாகரன்பிள்ளை அவர்களின் தலைமையில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது. 

ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல் எனும் தொனிப்பொருளில் அமைந்த இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன் போது முதியோர் மற்றும் சிறுவர்களுக்கான  விளையாட்டு நிகழ்வுகள், கெளரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட அதிதிகளால் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல்   உபகரணங்கள்  வழங்கப்பட்டதுடன், முதியோர்களுக்கான அத்தியாவசிய உடைகளும் அன்பளிப்பு செய்யப்பட்டது. 

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், முதியோர் சங்க பிரதிநிதிகள், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.








Comments