வவுணதீவில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினநிகழ்வு.....

 வவுணதீவில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினநிகழ்வு.....

மண்முனை மேற்கு வலய கல்வி அலுவலகம் மற்றும் ஏ.யூ.லங்கா இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறுவர்களின் நடனம், ஓவிய போட்டி, கண்காட்சி கூடங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் என்பன அமையப் பெற்றிருந்தன.
இந்நிகழ்வானது சைல்ட் பன்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் பிரமாண்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட பெரும்திரளான பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதன்போது நடாத்தப்பட்ட சிறுவர்தின கட்டுரை, கவிதை, ஓவியம், நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Comments