வாழ்வை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கெளரவம்...........

 வாழ்வை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கெளரவம்...........

வாழ்வை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் முகமாக சர்வதேச ஆசிரியர் தின விழா மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் டேபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவி கல்வி பணிப்பாளர் புவிராஜசிங்கம் ஓய்வு பெற்று செல்வதனால் முன்பள்ளி ஆசிரியர்களினால் இதன் போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
5 வருடங்களுக்குமேல் சேவையாற்றிய மண்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதன் போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது 30 வருட சேவையைப் பூர்த்திசெய்து 60 வயதைக் கடந்து ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டதுடன் முன் பள்ளி ஆசிரியர்களினால் நடனம் மற்றும் வில்லுப்பாடல் என்பன இசைக்கப்பட்டது.
சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் இந்திராணி புஸ்பராஜா கருத்து தெரிவிக்கையில் குழந்தைகளுக்கு சிறந்த நற்பண்புகள் மற்றும் வாழ்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன் ஆசிரியர்கள் சிறார்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றார்.
இந் நிகழ்வின் போது மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், தட்சண்யா பிரசந்தன், திட்டமிடல் பணிப்பாளர் பிறனவசோதி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் உலகில் சிறந்த பிரஜைகளை செதுக்கும் ஆசிரியர்களின் சேவையானது போற்றத்தக்கது மற்றும் அவர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Comments