10வது சமரை தம் வசமாக்கியது மட்டு இந்துக்கல்லூரி........

10வது சமரை தம் வசமாக்கியது மட்டு இந்துக்கல்லூரி........

மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதிய சிகரத்தினை நோக்கி எனும் தலைப்பிலான கிரிக்கட் போட்டி நேற்று (30) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் 10வது தடவையாக இச்சமரை விளையாடி வருகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் தனஞ்செயன் கலந்து கொண்டார்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தெரிவுசெய்தது, முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப்பெற்றது.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 29 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொள்ள 10வது  தடவையாக நடைபெற்ற இச்சமரை  மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் தம்வசமாக்கி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கிழக்கு மாகாணசபை பேரவையின் செயலாளர் கலாநிதி கோபாலரட்ணம், மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஹரிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Comments