விவசாய உபகரணங்கள், உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள் விநியோகம் ...

 விவசாய உபகரணங்கள், உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள் விநியோகம் .....

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகளை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (20) இடம்பெற்றது.
மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் மற்றும் உயர் ரக பயற்றை உற்பத்திக்கான விதைகள் என்பன விநியோகிக்கப்பட்டன.
இதன் போது பிரதேச செயலகத்தின் சகல கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 77 பயனாளிகளிடம் புசிட்டாவோ இன முளை திறன் பயற்றை உற்பத்திக்கான ஒரு கிலோ எடை விதைகளும், நீர்க்குழாய்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், மாவட்ட விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் ரி.தனிநாயகம், விவசாய போதனாசிரியர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தி.தயாபரன், சோ. ஜெயசுதன், க.கிரிதரன் ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments