அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

 அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு நிறைவுபெற்றது.
கடந்த 15 ஆம் திகதி பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றப்பட்டு, நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு சனிக்கிழமை (23) திகதி மாலை நற்கருணை ஆராதனை வழிபாட்டுடன், திருச்சொரூப பவனி இடம்பெற்றது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று (24) இடம்பெற்ற விசேட திருவிழா கூட்டுத் திருப்பலியை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைத்து ஒப்புகொடுத்திருந்தனர்.
திருப்பலியினை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சொரூப ஆசீருடன் கொடியிறக்கம் இடம்பெற்றது.
கப்பலேந்தி அன்னையின் திருச் சொரூபம் வாவியில் கொண்டு செல்லப்பட்டு வாவி ஆசீர்வதிக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவான அன்னையின் பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Comments