7 பேரை வாழவைத்து விட்டு உயிரிழந்த மாணவிக்கு 3A இது எப்படி.....

 7 பேரை வாழவைத்து விட்டு உயிரிழந்த மாணவிக்கு 3A இது எப்படி.....

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு நேற்றைய தினம் வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை குருநாகல் பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.
அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்றுA சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.
இவர் உயிரிழந்தன் பிற்பாடு தன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் எனும் பாகங்கள் மூலம் ஏழு நோயாளிகளுக்கு உதவி அவர்கள் இன்றுவரை உயிர் வாழ் உதவியுள்ளார்.

Comments