இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த சிறுமி மீட்கப்பட்டாள்.........

 இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த சிறுமி மீட்கப்பட்டாள்.........

களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர்.

களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலையின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


Comments