களுவாஞ்சிகுடியில் ஆட்பதிவு சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை......
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்ட பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இன்று (09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிறப்பு சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2023.12.31ம் திகதியை இறுதி தினமாக கொண்ட சுற்றறிக்கைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Comments
Post a Comment