சிப்தொற புலமை பரிசில் வழங்கி வைப்பு.....

சிப்தொற புலமை பரிசில் வழங்கி வைப்பு.....

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் மற்றும் சமுர்த்தி கெகுளு போட்டி பரிசளிப்பு நிகழ்வும்  இன்று 09ம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்  அவர்களும், கெளரவ அதிதியாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.ருவைத் அவர்களும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வி்ல் வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் பாடசாலை அதிபர்கள், சமுர்த்தி வங்கிச்சங்க தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சமுர்த்தி வங்கிச்சங்க நிறைவேற்று குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.அஸீஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வானது சமூக அபிவிருத்தி  உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களினால் ஏற்பா டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  











Comments