மட்டு.வாகரை காயங்கேணியில் கடலுணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு............

 மட்டு.வாகரை காயங்கேணியில் கடலுணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு............

மட்டக்களப்பு வாகரை காயான்கேணியில் கடலுணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் கிழக்கு மாகாண சபையின் மேற்பார்வையின் கீழ், உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் இந்த விற்பனை நிலையத் தொகுதி அமைக்கப்பட்டது.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.வீரசுதாகரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என்.மணிவண்ணன், வாகரை பிரதேச செயலாளர் ஜீ.அருணன், வாகரை வைத்தியசாலை வைத்தியர் எச்.எம்.ரி.சசிந்த, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments