மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குரார்ப்பணம்.......

 மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குரார்ப்பணம்.......

மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குரார்ப்பணம் செய்தல் மற்றும் அறிமுக பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் மா.தவராஜாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.

மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹினால் மாணவர் சட்ட மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர் சட்டத்தரணி சுபாசினி ருமணன், சட்டம் தொடர்பான அறிமுகத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்

நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் T.அனந்தரூபன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் K.ஜெயவதனன், கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரலாற்றில் முதன் முதலாக, இக் கல்லூரியில் மாணவர் சட்ட மன்றம் அங்குராரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 

Comments