வீடமைப்பு லொத்தரில் வெற்றிபெற்ற சமுர்த்தி பயனாளியின் வீடு கையளிக்கப்பட்டது.....

 வீடமைப்பு லொத்தரில் வெற்றிபெற்ற சமுர்த்தி பயனாளியின் வீடு கையளிக்கப்பட்டது.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 2023ம் ஆண்டிற்கான  பெப்ரவரி மாத சமுர்த்தி வீடமைப்பு லொத்தரில் வெற்றிபெற்ற சமுர்த்தி பயனாளியின் வீடு புணரமைக்கப்பட்டு  (04)ம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் அவர்களால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.சி. சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments