கதிர்காம யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து.....

 கதிர்காம யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து.....

கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை ஊடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று (21) அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதி விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிவிட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments