மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது....

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது....

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 148 வது கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில், M.J.C.பியஸ்டா எனும் தொனிப்பொருளில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.

கல்லூரியின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் சதாசிவம் சாந்தகுமார் தலைமையில் 148 வது கல்லூரி தின நிகழ்வு மிக கோலாகலமாக இன்று (29) இடம் பெற்றது

கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேசியக்கொடி, பாடசாலை கொடி ஏற்றப்பட்டு 148வது கல்லூரி தின கேக் வெட்டப்பட்டு மாணவர்களினால் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.

நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் 











Comments