ஜெயராஜா அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு நிகழ்வு .......

 ஜெயராஜா அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு நிகழ்வு .......

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில்  சுமார் 05 வருட காலமாக தன் அர்பணிப்பான சேவையை வழங்கி இடமாற்றலாகி செல்லும் செல்வநாயகம் ஜெயராஜா அவர்களுக்கு  மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் நலன்புரிச்சங்கத்தால் சேவை நலன் பாராட்டு நிகழ்வு, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும், மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் நலன்புரிச்சங்க தலைவருமான S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் (13) அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி நிதிப்பிரிவில் மிகச்சிறப்பான தன் சேவையை வழங்கியதுடன், சமுர்த்தி பணிக்காக தன் சொந்த பிரதேசத்தையே விட்டு விட்டு சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பிற பிரதேசங்களில் கடமையாற்றி தற்போது போரதீவுபற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளராக தம் பணியை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










Comments