மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்ததான முகாம்

 மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்ததான முகாம்.......

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் அனுசரனையுடன் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பொசன் போயா சிறப்பு நிகழ்வாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய விகாராதிபதி கெட்ட ஹிரி கம தம்ம சிறி ஹிமி தேரர் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர், தாதி உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குருதியினை தானமாக வழங்கியிருந்தனர்.

Comments