அகில இலங்கை ரீதியாக அக்ஸரா சமூக நல காப்புறுதி திட்டத்தில் சாதனை படைத்த கிரான் பிரதேச செயலகம்......

 அகில இலங்கை ரீதியாக அக்ஸரா  சமூக நல காப்புறுதி திட்டத்தில் சாதனை படைத்த கிரான் பிரதேச செயலகம்......

 அக்ஸரா  சமூக நல காப்புறுதி திட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு (கிரான்)  பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இரண்டாம் இடங்களையும், மாவட்ட மட்டத்தில் முதல் நான்கு இடங்களையும் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 10ம் திகதி  கோரளைப்பற்று தெற்கு (கிரான்)  பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பதிகாரிகளான  Y.M.இனிகோ மற்றும் A.M.ஆமீன், உதவி பிரதேச செயலாளர் யோகராஜா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

அக்ஸரா சமூக நல காப்புறுதி தொடர்பில் மாவட்ட மட்டம் தேசிய மட்டத்தில்  சாதனை படைத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான நி.சகாயமலர், சா.தம்பியப்பா, வ.புஸ்பமலர், K.குணநாயகம் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன்  இவர்களுடன் இச்சேவையை வழங்கிய  சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  G.சிவபாதசேகரம் அவர்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் அவர்களினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






Comments