ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை, தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பான திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு!!

 ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை, தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பான திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு!!

இளைஞர், யுவதிகள் மத்தியில் ஊடக தர்மத்தினை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை, தீவிரவாதத்தை தடுத்தல் எனும் தொனிப் பொருளில் 900 இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்தும் திட்டம் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் (16) மட்டக்களப்பு மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிசிகலா புண்ணிய மூர்த்தி, மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜிவானந்தன், ஹெல்விட்டாஸ் நிறுவன முகாமையாளர் ஹசாந்தி, திட்ட உத்தியோகத்தர் ரமேஸ், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், குறித்த திட்டத்தின் பயிற்சி செயலமர்வுகளின் வளவாளர்களாக பயிற்றுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், LiFT நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள், கல்வி திணைகள அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் நுட்ப கல்லூரியின் அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி வி.ஜீவானந்தனின் சேவையினை பாராட்டி ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமாகிய எம்.ரீ.எம்.பாரீஸ் உள்ளிட்ட மாவட்ட ஊடகவியலாளர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவித்திருந்தனர்.
குறித்த செயற்திட்டத்தினை ஜீசெப் (GCERF) மற்றும் ஹெல்விடாஸ் (HELVETAS) நிறுவனங்களின் நிதி அனுசரணையில், LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனம் மாவட்ட ஊடகப்பிரிவின் பூரண அனுசரனையுடன் திறம்பட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Comments