சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நிகழ்வு.....
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வானது அண்மையில் (மே 21) காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச்சிங்கள மொழிப் பாடநெறி பெப்ரவரி மாதம் 7திகதி முதல் நடைபெற்ற இப்பாட நெறியில் 37 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளனர்.
வளவாளராக கலந்து கொண்ட எஸ்.ஜெயராஜ் ஆசிரியருக்கு பிரதேச செயலாளர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
Comments
Post a Comment