வறுமைக் கோட்டிற்குபட்ட மாணவர்களின் கற்றலுக்கு உதவும்இ மட்டு.புனித ஜோசப் வாஸ் சபை.....

 வறுமைக் கோட்டிற்குபட்ட மாணவர்களின் கற்றலுக்கு உதவும்இ மட்டு.புனித ஜோசப் வாஸ் சபை.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில், புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கல்வி மேம்பாட்டுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளுக்கான பாதணிகள் நன்கொடையாளரான ஜெகதீசன் ஹென்றியின் நிதி பங்களிப்பில், அமரத்துவம் அடைந்த ஜோசப் நவரெட்ணம் ஹென்றி, கலிஸ்டாமேரி ஹென்றி, கசிடி பிரதீபன் ஆகியோரின ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டன.

பாடசாலை அலுவலக போட்டோ பிரதி இயந்திரத்திற்கான உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலை ஆசிரியர்களினால் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கான பாதணிகள் பாடசாலை அதிபர் துஸ்யந்தி ஜெயவதனன் தலைமையில் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Comments