கருவேப்பங்கேணி கிராமத்தினை பாதுகாப்பு கிராமமாக உருவாக்குவதற்கான கலந்துரையாடல்....

கருவேப்பங்கேணி கிராமத்தினை பாதுகாப்பு கிராமமாக உருவாக்குவதற்கான கலந்துரையாடல்....

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி கிராமத்தினை பாதுகாப்பு கிராமமாக உருவாக்குவதற்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல், தேவை நாடும் மகளிர் அமைப்பின் கிளை முகாமையாளர் சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் Y.M.C.A மண்டபத்தில்  இடம் பெற்றது.

கருவேப்பங்கேணி பாதுகாப்பு நகரம் ஒன்றை அமைப்பதற்கான கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 'வன்முறைக்கெதிரான வெற்றி' எனும் தொனிப்பொருளில், தேவை நாடும் மகளிர் அமைப்பானது யூ.எஸ்.எயிட் நிதி அனுசரனையில் இச் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இக்கலந்துரையாடலில், பிரதம அதிதியாக மாவட்ட உதவி செயளாலர் ஆ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எம்.எல்.சியாவூல் ஹக், விரிவுரையாளர் இனோக்கா பிரியதர்சினி, தேவை நாடும் மகளிர் அமைப்பின் அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் மண்முனை வடக்கு சிறுவர் பெண்கள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், சுகாதார பரிசோதகர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments