மட்டக்களப்பு சவுக்கடி கடலில் மூழ்கிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்....

 மட்டக்களப்பு சவுக்கடி கடலில் மூழ்கிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்....

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டு, சவுக்கடி கடலில் குளித்துள்ளனர்.இதன்போதே அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும்இ கருவப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் மற்றும் இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

(06) மாலை இவர்கள் வீட்டிலிருந்து வந்து குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும்போதே அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இரு மாணவர்களின் மரணச் செய்தி மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Comments