மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் "ஒல்லாந்தன் நந்திபுல்" வடமோடி கூத்து....

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் "ஒல்லாந்தன் நந்திபுல்" வடமோடி கூத்து....

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலை நளினகலா நாடக மன்றமும் இணைந்து நடாத்தும் "ஒல்லாந்தன் நந்திபுல்" வடமோடி கூத்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் திமிலைதீவு கிருஸ்ணன் கோயில் வளாகத்தில் (04) மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்களும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் வ.தேவநேசன் அவர்களும் கலந்து கொள்ள கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் த.மலர்செல்வன் அவர்களும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடக மன்ற தலைவர் அமுதா வரதராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 



Comments