'பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு பொலிஸாரினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

 'பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு பொலிஸாரினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

'பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்பதுடன், இனம் தெரியாதோர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் இது தொடர்பாக பெற்றோர் உட்பட அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினால், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119ற்கு அழைப்புவிடுக்குமாறும், 065-2224356 அல்லது 065-2224422 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் மட்டக்களப்பு பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், துண்டுபிரசுர விநியோக நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments