மட்டு.புனித திரேசா பெண்கள் பாடசாலையில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு பாதணி......

 மட்டு.புனித திரேசா பெண்கள் பாடசாலையில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு பாதணி......

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய, புனித ஜோசெப் வாஸ் சபையினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் கல்வி மேம்பாட்டுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட புனித திரேசா பெண்கள் பாடசாலையில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள கல்வி துறையினை மேம்படுத்தும் வகையில் பாதணிகள் வழங்கப்பட்டன.

அமரத்துவம் அடைந்த ஜோசப் நவரெட்ணம் ஹென்றி, கலிஸ்டாமேரி ஹென்றி, கசிடி பிரதீபன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஜெகதீசனின் நிதி பங்களிப்பில் பாதணிகள் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் துஸ்யந்தி ஜெயவதனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Comments