சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில்.......

 சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில்.......

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இன்று (10)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன் நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகிது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார்,  சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர்  சியாந்தினி கமல்ராஜ், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், விற்பனையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சிசு திரிய புலமைப்பரிசில் 90 மாணர்களுக்கு வழங்கப்பட்டதுடன், அருணலு கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.















Comments