மட்டக்களப்பு கல்லடிஉப்போடை சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

 மட்டக்களப்பு கல்லடிஉப்போடை சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

மட்டக்களப்பு சைவமங்கையர் கழகமானது கடந்த இரண்டரை வருடமாக ஆரம்பிக்கப்பட்டு   சமயப்பணியையும், சமூகப்பணியையும் சிறப்பாக செய்து வருகின்றது. அந்த வகையிலே (08) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சைவமங்கையர் கழகத் தலைவி திலகவதி   ஹரிதாஸ்  தலைமையில் துளசி மண்டபத்தில் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.   இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்தா    அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக பணிப்பாளர்  கலாநிதி பாரதி  புளொரன்ஸ் கெனடி அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் மைதிலி பாத்லட் அவர்களும் பங்குபற்றினார்கள்.

மகளிர் தின சொற்பொழிவு இடம் பெற்றதுடன், கல்லடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையுள்ள   மங்கையர்கள் பலரும் அவர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுயதொழில்  வழிகாட்டல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.  

 இதற்கு   வளவாளர்களாக  மலர்விழி லோகேந்திரராஜா   அவர்களும்,   உமா சக்திவேல் அவர்களும்  பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து  ஆரம்பித்து வைத்தனர். இதனால் இப்பிரதேசப் பெண்கள்  பலர் வீட்டில் இருந்து கொண்டே பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கக்கூடிய   செயற்பாட்டிற்கு அடிகோலப்பட்டுள்ளது. 











Comments