ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் விழிப்புணர்வு-Battieye.blogspot.com
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் விழிப்புணர்வு-Battieye.blogspot.com
போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் (21) அன்று போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வைக்கப்பட்டதுடன். வாகனங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இத்துண்டு பிரசுரத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றியும். சட்டவிரேத போதைப்பொருள் பாவனையின் விளைவு பற்றியும், விற்பனை செய்தல், உற்பத்தி தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான விபரங்களும், உளவளத்துணை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாக தொடர்வு கொள்ள வேண்டிய நிறுவனங்கள், மற்றும் தொடர்பு இலக்கங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வாகனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வானது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கமகெதர, மாவட்ட போதைப்பொருள் இணைப்பாளர் P.தினேஸ். மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் விளைவ V.ஜெகன், ஏறாவூர் பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment