ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச மட்ட புதிய சமுர்த்தி நிர்வாகம் தெரிவு:Battieye.blogspot.com
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சமுர்த்தி பிரதேச அமைப்புக்களின் வருடாந்த நிருவாக தெரிவு கூட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது வருடந்தோறும் தெரிவு செய்யப்படும் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் நிரூபா பிருந்தன் , சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.இராசலிங்கம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் K.கலாதேவன், மாவட்ட செயலக சமுதாய அடிப்படை அமைப்பு விடய முகாமையாளர் K.பகீரதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உதவியாளர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment