சமுர்த்தி செளபாக்கியா ரன்விமன வீடுகள் கையளிப்பு-Battieye.blogspot.com

சமுர்த்தி செளபாக்கியா ரன்விமன வீடுகள் கையளிப்பு-Battieye.blogspot.com

கோறளைப்பற்று மத்தி  பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி செளபாக்கியா ரன்விமன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் (21) அன்று பயனாளிகளிடம்  கையளிக்கப்பட்டது. ஒரு வீட்டினை அமைப்பதற்கு  சுமார் 1900000 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சமுர்த்தி திணைக்களம் நன்கொடையாக 650000 வழங்கியதுடன் மீதி பணத்தினை பயனாளி மற்றும் மக்கள் பங்களிப்பு பெறப்பட்டு இவ்வீடுகள்  முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வில்    மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா. மாவட்டசெயலக சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.பசீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். 

 இந்த நிகழ்வில்  கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி முகாமையாளர் K.புவிதரன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Comments