சிசுபல வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல்-Battieye.blogspot.com
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் தான் இந்த சிசுபல வேலைத்திட்டமாகும். இதன் போது 450 மாணவர்களுக்கான 2000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸமில் அவர்களின் தலைமையில் அல் இக்பால் வித்தியாலத்தில் (21) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.பஸீர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா, மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி விடய முகாமையாளர் கி.புவிதரன், கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஸீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன். சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment