களுவாஞ்சிகுடி பிரதேச செயலாகப் பிரிவில்அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் அரிசி விநியோக தேசிய பெரும்போக நிகழ்ச்சித்திட்டம்...

 களுவாஞ்சிகுடி பிரதேச செயலாகப் பிரிவில்அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் அரிசி விநியோக தேசிய  பெரும்போக நிகழ்ச்சித்திட்டம்...

'நெல் கொள்வனவு மற்றும் கையிருப்பு நெல்லை அரிசியாக்கல்' என்ற அரசாங்க திட்டத்தின்  2022/2023 காலப்பகுதியில் பெரும்போகத்தில் அறுவடை செய்த  நெல்லை,  கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி அடையாளம் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும்  நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாகப் பிரிவில்  இடம்பெற்றது. 

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில்  களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இத்திட்டத்திற்காக  குறைந்த வருமானம் பெறும் 13,429  குடும்பங்கள் இதுவரை  தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி  விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கொள்வனவு செய்யப்பட்ட நெல், தெரிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அரிசி, 10 கிலோ கிராம் பைகளாக பொதிசெய்யப்பட்டு, மாதமொன்றுக்கு 10 கிலோ வீதம் இரண்டு மாதங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமூக சேவை, கிராம சேவை, விவசாய அபிவிருத்தி மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.










 

Comments