ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

 ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு:Battieye.blogspot.com

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வாழும் வறிய குடும்பங்களின்  மாணவர்களின் கல்வி விருத்தியை  மேம்படுத்தும் நோக்குடன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அன்மையில் கித்துள் கிராமத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக சமுர்த்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டு  பின்தங்கிய கிராமமான கித்துள் கிராமத்தில் பாடசாலை செல்லும் வறிய 200 மாணவர்களை இனங்கண்டு கற்றல் உபகரணங்கள்  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம், சமுர்த்தி சமூக உதவியாளர் S.தவநீதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments