தொழிற்சங்கப் போராட்டத்தால், மட்டக்களப்பில் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.....

 தொழிற்சங்கப் போராட்டத்தால், மட்டக்களப்பில் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.....

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவின்மையால் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் வருகை தந்து திரும்பிச்சென்றதையும் காண முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டதை முன்னெடுத்துள்ளன.

தொழிற்சங்கங்கங்களால் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துச்சேவைகள் வழமைபோன்று நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

Comments