காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்:Battieye.blogspot.com

 காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்:Battieye.blogspot.com

அரசாங்கத்தின் நாடு பூராகவும் இடம்பெறும் சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயகப்பிரிவில் சமுர்த்தி பிரிவால் போசாக்குள்ள உணவு அல்லது இலைக்கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சில்மியா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய காத்தானகுடி 167c கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஹிஸ்புழ்ழா பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு போசாக்குள்ள இலைக்கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தினூடாக சிறுவர்களின் போசாக்கினை நிவர்த்தி செய்யப்பட்டுவருகின்றது.
மேற்படி நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர், காத்தான்குடி பிரதேச செயக சமுர்த்தி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Comments