கோறளைப்பற்று வாழைச்சேனை – சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பழத்தோட்டம் - 2023:Battieye.blogspot.com

 கோறளைப்பற்று வாழைச்சேனை – சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பழத்தோட்டம் - 2023:Battieye.blogspot.com

சமுதாய சீர்திருத்த திணைக்களத்தினால் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களை நல்வழிப் படுத்துவதத்காக சமூக சீர்திருத்த கட்டளைக்குட்பட்டவர்களைக் கொண்டு சிறிய அளவிலான பழத்தோட்டம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு (07) பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டதுடன், சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் தயானந்தன், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பத்தினிதாசன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் தவறுகள் இழைத்தவர்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அவர்களது உளமாற்றம் மற்றும் சீர்படுத்தப்பட்ட நேர்த்தியான வாழ்க்கை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதற்காக ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வின் முதற்கட்டமாக பழமர நடுகை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் வாழை, அன்னாசி போன்ற பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையானது சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments