அரை இறாத்தல் பாணுடன் பருப்புக்கறி 130 ரூபா....

 அரை இறாத்தல் பாணுடன் பருப்புக்கறி 130 ரூபா....

இன்று இரவு 12 மணி முதல் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை நூற்று முப்பது (130) ரூபாவாக இருக்கும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாவின் விலை குறைப்பு தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்க நுகர்வோர் அதிகார சபை செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 400 ரூபாவாக இருந்த நிலையில், கொத்து ரொட்டியின் விலை 1000 ரூபாவாக இருந்தது. இன்று கோதுமை மாவின் விலை இருநூறு ரூபாவாக குறைந்துள்ளதால், கொத்து ரொட்டியின் விலையும் குறைக்கப்பட்டு அதே விலையில் மக்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments