QR இன்றி பெற்றோல் வழங்க மறுத்ததால் ஊழியர் மீது வாள் வெட்டு......

QR இன்றி பெற்றோல் வழங்க மறுத்ததால் ஊழியர் மீது வாள் வெட்டு......

எரிபொருள் ஒதுக்கீடு அனுமதி அட்டை (QR code) இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு 10.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் (QR code) இன்றி, பெற்றோல் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதன்போது, எரிபொருள் நிலைய ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே குறித்த இருவரும் ஊழியரை வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Comments