மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்......

 மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்.......

இந்தப் பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாறாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 66,000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மகா பருவ நெல் கொள்வனவுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Comments