நோட்டன்பிரிட்ஜ் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு.....

 நோட்டன்பிரிட்ஜ் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு.....

நோட்டன்பிரிட்ஜ் தியகல வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் புதையுண்டிருந்த இளைஞனின் சடலம் லக்ஷபான இராணுவ முகாம் படையினர் மற்றும் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் இன்று (20) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டிலான் கௌசல்ய என்ற 33 வயதுடைய இந்நபர் ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில், 26 பேர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர். பேருந்தில் இருந்து வந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பேருந்தை சோதனையிட்ட போது காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Comments