உலக அளவில் சமாதான விருது பெறும் முதலாவது தழிழர்......

 உலக அளவில் சமாதான விருது பெறும் முதலாவது தழிழர்......

உலக மெதடிஸ்த திருச்சபை சமாதான விருது 2022ஐ முதல் தடவையாக ஆசியாவைச் சேர்ந்த தழிழர் ஒருவருக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத்தலைவர் அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் அவர்களுக்கே அந்த விருது வழங்கப்பட இருக்கின்றது. அவரின் அருட்பெரும் சமாதானத்துகும் நீதிக்குமான பணியை கௌரவிக்கும் முகமாக உலக மெதடிஸ்த திருச்சபை மன்றத்தினால் அந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.

 இனம், சமயம், மொழிகள், முதலானவற்றை கடந்து சர்வ சமய தலைவர்களுடன் சமய உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தி தோழமையுடனும் திறந்த மனதுடனும் நம்பிக்கையோடும் எதிர் நோக்குடனும் சர்வ சமய உரையாடலை மேற்கொண்டது,

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தில் உறுப்புரிமை வகிக்கும் அனைத்து திருச்சபை தலைவர்களையும் பொதுமைப்படுத்தி நீதிக்கும் சமதானத்திற்கும் அரசியல் கட்சி சாராது கிறிஸ்தவ அறநெறி விழும்மியங்களுக்குட்பட்டு துணிச்சலாக குரல் எழுப்பியதுடன் பல்வேறு செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியது,

சமூகத்தில் கிராமம், நகரம், எல்லை கிராமம் ஆகிய வேறுபாடுகளை கடந்து நாட்டின் சமாதானத்திற்கும் நீதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊக்கியாக செயற்பட்டு மனித மாண்பை கட்டியெழுப்புவதில் முன்னின்று உழைத்தது,

இனங்களுக்கிடையில் பகைமை வளர்ந்த காலங்களில் பகைமைகளை அழித்து மனிதத்துவத்துடன் இணைந்து வாழ உறுதியான பணிகளை மேற்கொண்டது,

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு எத்தகைய சுய விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணி புரிந்தது,

இவை உட்பட இவரது சமாதானத்திற்கான திருப்பணியை ஏற்புடமை செய்த அகில உலக மெதடிஸ்த கிறிஸ்தவ மன்றம் 2022ஆம் ஆண்டிற்கான சமாதான விருதிற்காக பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் இவ் உயரிய விருதை பெறும் முதலாவது இலங்கையர் என்பதோடு முதலாவது ஆசியா கண்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 18.02.2003 அன்று மெதடிஸ்த உவெஸ்லி கல்லூரியில் மாலை 5மணிக்கு அந்த விருது வழங்கும் வைபவம் விமர்சையாக நடைபெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் திருச்சபை பேராயர்களும், உலக திருச்சபை தலைவர்களும், முதன்மை குருக்களும், பல்சமய தலைமைக் குருக்களும், திருச்சபை இறை மக்களும், அன்பர்கள், நண்பர்களும், கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.




Comments